கதிரவன்

கதிரவன்

எடுப்பு

காலை எழுந்தவுடன் கதிரவனை வணங்கு

தொடுப்பு

மாலை முழுதும் நீ நல்லபடி ஆடு

உடலும் உயிரும் மனமும் எப்போதும் புத்துணர்வு பெற்றிருக்க வேண்டும்

முடிப்பு

கலை பல கற்றுக் கொள்க விலை போகாமல் இருக்க

தலையினில் கர்வம் வேண்டாம் மலை போன்ற புகழும் சேரும் வாழ்க எந்நாளும்

Prof. V.V. Meenakshi Jayakumar

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ என் கண்ணே

ஆராரோ ஆரிரரோ

தெய்வங்கள் பெருமாள்பிள்ளை ஆராரோ ஆரிரரோ

செய்வாய் பல தவமே நீ ஆராரோ ஆரிரரோ

மெய்வாய் புலன் அடக்கி வளர் ஆராரோ ஆரிரரோ

சிவபூஜை தனை செய்வாய் ஆராரோ ஆரிரரோ

தவயோகம் தான் புரிவாய் ஆராரோ ஆரிரரோ

உலகன்னை பாதம் பிடி ஆராரோ ஆரிரரோ

மலம் மூன்றும் போக்கிடுவாள் ஆராரோ ஆரிரரோ

அன்னையும் அப்பனும் அவளே ஆராரோ ஆரிரரோ

துன்பத்தை நீக்குபவள் அவளே ஆராரோ ஆரிரரோ

என் கண்ணே கண் வளராய் ஆராரோ ஆரிரரோ

சன்மார்க்கத்தில் மூழ்கிடுவாய் ஆராரோ ஆரிரரோ

உமையவள் வடிவழகு உரைக்க ஒரு சொல்லுமில்லை

இமைக்காமல் பார்த்திடவே என்னால் முடியவில்லை

உதிக்கின்ற செங்கதிர் உமையவள் மேனி

துதிக்கின்ற என் சிறு சொற்கள் உமையவள் அருளே

மதிக்கின்ற சிவனுடைய உடலோ அவளில் பாதி

விதிக்கின்ற என்னுடைய வாழ்வு உமையவள் அருளே

சிவகாமி அருள்வாமி அபிராமி அருள்வாமி

Prof. V.V. Meenakshi Jayakumar

மாரிமுத்தாப்பிள்ளை

மாரிமுத்தாப்பிள்ளை

அவதாரம் செய்தார் சிவபக்தர்

பவசாகரம் தனை நாம் கடக்க – அவதாரம் செய்தார் சிவபக்தர்

சிவயோகம் தனைபுரிந்து தவயோகத்தினில் நிறைந்து

உவட்டாத உபதேசம் செய்து

அவதாரம் செய்தார் சிவபக்தர்

Prof. V.V. Meenakshi Jayakumar

மின்னல்

மின்னல்

எடுப்பு

மின்னல் போல் மறையும் வாழ்வில் ஏனோ மனக்குமறல்கள்

கன்னல் அன்பு கொண்டிடுவோம் கண்ணன் புகழ் பாடீயே

தொடுப்பு

அன்னையும் அப்பனும் ஒவ்வொரு பிறப்பாலும் வேறே

அன்பு கொண்ட மனைவியும் ஒவ்வொரு பிறப்பிலும் வேறே – மின்னல்

முடிப்பு

உள்ளமதில் அன்பு வைப்போம் வெள்ளை உள்ளம் கொண்டிடுவோம்

அள்ள அள்ள அன்பு தருவோம் கள்ள மனதை விரட்டுவோம்

Prof. V.V. Meenakshi Jayakumar

எங்கள் திருநாட்டில்

எங்கள் திருநாட்டில்

எடுப்பு

மலையருவி வந்து பாயும் எங்கள் திருநாடே

மடிமடியாய் பால் சுரக்கும் பசு உள்ள நாடே

தொடுப்பு

குலைகுலையாய் வாழை இருக்கும் எங்கள் திருநாடே

இடி இடியாய் முழவதிரும் எங்கள் திருநாடே

முடிப்பு

சுனைகளெல்லாம் தேன் சொரியும் சுரக்கும் எங்கள் நாடே

பனைகளெல்லாம் கள் சுரக்கும் எங்கள் திருநாடே

வினைகள் ஏதும் பழுக்காது எங்கள் திருநாடே

மனைகள் தோறும் மங்களமே எங்கள் திருநாடே

 

தோகைமயில் ஆடிடுமே எங்கள் திருநாட்டில்

வாகைமயில் கூவிடுமே எங்கள் திருநாட்டில்

ஆகையாலே அனைத்து வளம் எங்கள் திருநாட்டில்

சாகை தோறும் சந்தனமே எங்கள் திருநாட்டில்

குழலிசையும் வீணையிசையும் எங்கள் திருநாட்டில்

மழலைமொழி கேட்டிடுமே எங்கள் திருநாட்டில்

குரவையுடன் கூத்திடுவோம் எங்கள் திருநாட்டில்

அரனுடன் அரம்பை ஆடுவர் எங்கள் திருநாட்டில்

 

வீடெல்லாம் தேவாரம் எங்கள் திருநாட்டில்

நாடெல்லாம் தமிழிசையே எங்கள் திருநாட்டில்

பாடெல்லாம் பண்ணிசையே எங்கள் திருநாட்டில்

காடெல்லாம் கனி குலுங்கும் எங்கள் திருநாட்டில்

எங்கள் நாட்டின் பெருமை சொல்வேன் தங்கமே நீ கேள்

மங்களமே சூழ்ந்திருக்கும் அன்றும் இன்றும் என்றும்

அங்கயற்கண்ணி அருள் தருவாள் அன்றும் இன்றும் என்றும்

Prof. V.V. Meenakshi Jayakumar

வெற்றி வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி வெற்றி

எடுப்பு

வெற்றி வெற்றி வெற்றி

கிட்டுமே நமக்கு

வெற்றி வெற்றி வெற்றி கிட்டுமே

தொடுப்பு

பற்றி பற்றி பற்றி நடப்போம் நல்லோர் வழியை

பற்றி பற்றி பற்றி நடப்போம் – என்றும்

முடிப்பு

முற்றும் துறந்த முனிவர் சொன்ன வழி

சற்றும் மனம் தளராமல் சொன்னபடி வாழ்ந்திடவே

வெற்றி வெற்றி கிட்டுமே நமக்கு

Prof. V.V. Meenakshi Jayakumar

கோள் சொல்லாதே பாப்பா

கோள் சொல்லாதே பாப்பா

எடுப்பு

கோள் சொல்லாதே பாப்பா

கோள் சொல்லாதே

தொடுப்பு

ஆள் கொல்லி நோய்தான் பாப்பா – இது

ஆள் கொல்லி நோய் தான்

கோள் சொல்வது குடி கெடுக்கும்  பாப்பா

குடி கெடுக்கும் – ஆகவே

கோள் சொல்லாதே பாப்பா

கோள் சொல்லாதே

முடிப்பு

தாள் பணிந்து வாழலாம் நல்லோர்

தாள் பணிந்து வாழலாம்

வாள் வீச்சினும் கொடிது பாப்பா

கோள் சொல்லி வாழ்வது

கோள் சொல்லாதே பாப்பா

கோள் சொல்லாதே

Prof. V.V. Meenakshi Jayakumar

கதிரவன் கவசம்

கதிரவன் கவசம்

ஞான ஆசிரியன் நீயே ஞாயிறு தேவா

ஞான ஆசிரியன் நீயே

மோனமாய் கல்வி  புகட்டும் சிவனின் ரூபம் நீயே

கானமாய் கலைகள் அருளும் கண்ணனின் ரூபம்  நீயே

ஆன சுகம் தந்திடுவாய் தன் பாதிரி ரூபம் நீயே – சுப

மான எல்லாம் தந்தே அருளும் ஆரோக்கிய தேவன் நீயே

Prof. V.V. Meenakshi Jayakumar

ஆதவனைப் போற்றிடுவோம்

ஆதவனைப் போற்றிடுவோம்

ஞாயிறு போற்றுதுல்

எடுப்பு

கண் கண்ட தெய்வமே கலியுக வரதே

கதிரவா உமக்கு எம் வணக்கம்

தொடுப்பு

விண்ணாளும் வேந்தன் நீ வேதாந்த ரூபன் நீ

கதிரவா உமக்கு எம் வணக்கம்

முடிப்பு

மண் தழைக்க மழை அருள்வாய் வாழ்க நீயே

கண் செழிக்க வரம் அருள்வாய் வாழ்க நீயே

தண் நிகர் குளிர் மதி வருமே உன்னாலே

பண் கொண்டு பாடுகிறோம் அருள்வாய் நீயே

Prof. V.V. Meenakshi Jayakumar

இராவணன்

இராவணன்

எடுப்பு

இராவணன்

மூவுலகின் மன்னன் நானடி சீதாதேவி நீ கேள்

மூவுலகின் மன்னன் நானடி

தொடுப்பு

ஏவும் பணியாட்கள் கோடி

ஏனிந்த கோபம் வாடி

காவு கொள்வேன் எனை எதிர்ப்போரை

காணு கொஞ்சம் எந்தன் முகமே

மூவுலகின்

முடிப்பு

யானை எட்டினை வென்றவன் நானே

மானை அனுப்பியே மயக்கினேன் உன்னை

பானை வயிறு கும்பகர்ணன் என் தம்பி

ஏனைய சொல்லி என் பயன்? இதோ பார்.

Prof. V.V. Meenakshi Jayakumar