திருஆடிப்பூரம்

திருஆடிப்பூரம் பாடல்

பல்லவி

திருஆடிப்பூரத்தில் உலகில் வந்தாள்

திருவில்லிப்புத்தூரில் உதித்து வந்தாள

–  வாழி

அனுபல்லவி

திருப்பாவை ஆண்டாளின் வாய்வேதம்

திருப்பாவை நோன்பு அவள் கை வேதம்

– வாழி

 

சரணம்

பெரியாழ்வார் மகளாய் வளர்ந்து வந்தாள்

பெரிய உரை நமக்குச் சொல்லித் தந்தாள்

கரிய திருமாலினக்கு மாலை தந்தாள்

பெரிய திருவடி மீது பறந்து வந்தாள்

– திருஆடி

-பேரா.வே.வெ.மீனாட்சி ஜெயகுமார்

கதிரவன்

கதிரவன்

எடுப்பு

காலை எழுந்தவுடன் கதிரவனை வணங்கு

தொடுப்பு

மாலை முழுதும் நீ நல்லபடி ஆடு

உடலும் உயிரும் மனமும் எப்போதும் புத்துணர்வு பெற்றிருக்க வேண்டும்

முடிப்பு

கலை பல கற்றுக் கொள்க விலை போகாமல் இருக்க

தலையினில் கர்வம் வேண்டாம் மலை போன்ற புகழும் சேரும் வாழ்க எந்நாளும்

Prof. V.V. Meenakshi Jayakumar