நவராத்திரி

நவராத்திரி

navarathiri

அம்பிக்கை தாயே ஆண்டருள்வாயே

இன்னல் போக்கியே எம்மை காத்தருள்வாயே

ஆதி சக்தியே ஜோதி சக்தியே

ஆடிப் பாடுவோம் வந்தருள்வாயே!

 

கோலம் வரைந்தோம், கொலுப்படி அமைத்தோம்

கோடி ஜென்ம பாவம் தீர விரதமும் இருந்தோம்

ஓடி நீ வருவாய், எம்மைத் தேடி வருவாய்

நாடியே வந்து நலம் பல புரிவாய்!

 

தீமையை அழிக்கும் துர்க்கையும் நீயே

செல்வமும் அளிக்கும் லட்சுமியும் நீயே

கல்வியை அளிக்கும் சரஸ்வதி நீயே

ஆதி சக்தியே எம்மைக் காத்தருள்வாய்!

 

கன்னி பூஜை செய்தோம் ஏற்றருள்வாயே

கடைக்கண்ணால் நீ எம்மை காத்தருள்வாயே

விஜயதசமியில் பயிலத் தொடங்கினோம்

வித்தையை அளிப்பாய் வெற்றியும் தருவாய்!

Prof. V. V. Meenakshi Jayakumar