நதி

நதி

nadi river image

காட்டோரம் ஒரு நதி

காடுகாக்கும் நல்ல நதி

காடுபாக்க போகையிலே

காடுபாக்க போகையிலே – இந்த

காதற் பாட்டு வந்துடுச்சி

தன்னானானனானே தன தன்னானானனானே

காசு பணம் வேணாமின்னு

காதோரம் சேதி சொல்லி

கால் நடையா நடந்து வந்தேன்

கால் நடையா நடந்து வந்தேன் – நான்

காதல் நதியே உன்னைத் தேடி

தன்னானானனானே தன தன்னானானனானே

காலை மாலை இரண்டு வேளை

காவற்காக்கும் சூரியனே

காக்க வரும் சாமி நீயே

காலமெல்லாம் நல்லா வாழ

ஆசி ஒன்னு சொல்லு நீ

ஆறுதலா நில்லு

Prof. V. V. Meenakshi Jayakumar

கிளி

கிளி

Kili

ஆத்தோரம் ஆலமரம்

அதிலேவொரு நடு கிளை

அங்கவொரு கிளிக் குஞ்சு

அழகு கொஞ்சும் சின்னக் கிளி

அந்த கிளி பறந்து பறந்து

அம்மன் மேல அமர போகும்

அந்த கிளியாக நானிருக்க

அம்மா எனக்கு வரங்கொடு

  Prof. V. V. Meenakshi Jayakumar

கண்ணன்

கண்ணன்

kannan flute

கண்ணன் கையில் குழலாவேன் – நான்

கண்ணன் கையில் குழலாவேன் – என்

எண்ணங்கள் அனைத்தையும் அவனிடம் தந்து

குழலைப் போல் நான் உள்ளொன்றும் கொள்ளேன்

 

மண்ணைத் தின்று உலகம் படைப்பான் – என்

மனதைத் தின்று உவகை கொள்வான்

பண் கொண்டு பாடும் எந்தன் குரலில்

தேனாய் வந்து இனிமை கொடுப்பான்

 

விண்ணையும் மண்ணையும் காலால் அளப்பான்

வீணையில் இசையாய் என் வசம் வருவான்

அண்டமும் பிண்டமும் அவனே என்ற

உண்மையை எனக்கு அனுதினம் உரைப்பான்

Prof. V. V. Meenakshi Jayakumar

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

Corona

ஆடுவோமே பள்ளு பாடுவோமே      

பல்லவி

ஆடுவோமே பள்ளு பாடுவோமே – நாம்

அனைவரும் தடுப்பூசி போட்டு விட்டோம் என்று – ஆடுவோமே

அனுபல்லவி

எங்கும் கொரோனா என்பதே பேச்சு – நாம்

எல்லோரும் பயப்பட வேண்டியதாச்சு

தடுப்பூசி என்பது தடுப்பதற்கே அது போல்

முகக்கவசம் கூட அவசியமே..

சரணம்

முகச் சுத்தம் கைச் சுத்தம் பேணிக் காப்போம் – நாம் (2)

அடிக்கடி கைகளை சுத்தம் செய்வோம்

கூட்டமுள்ள இடங்களுக்கு செல்ல மாட்டோம்

தேவையின்றி வெளியில் வர மாட்டோம்

 

நாமிருக்கும் இடத்தை சுத்தமாய் வைப்போம்

அதைப் போல் மற்றவருக்கும் உதவிடுவோம்

தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்போம்

கொரோனா இல்லாத தேசத்தில் வாழ்ந்து காட்டுவோம்

Prof. V. V. Meenakshi Jayakumar

 

அன்னாபிஷேகம்

annabhishegam

அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம் கண்டவர் கலி தீரும்

ஆண்டவன் நமக்கு அருள் தரும் நாள்

இந்த நாளில் இந்த அன்ன கோலத்தில்

ஈசனைக் கண்டால்

உண்மை பொருள் சேரும்

ஊழ்வினை அகலும்

எண்ணியதெல்லாம்

ஏற்றபடி நடக்கும்

ஐங்கரன் தந்தை நம்மை என்றும் காப்பான்

ஒரு நூறு ஜென்ம பாவம்

ஓடியே போகும்

ஔடதமே இப்பிறவி பிணிக்கு அன்னாபிஷேகமே..

காஞ்சி மஹா பெரியவர் அருள் என்றென்றும் நமக்கு இருக்கட்டும்.

Prof. V. V. Meenakshi Jayakumar

அன்னபூரணி

Annapoorani

அன்னபூரணி யின் அழகே.. அழகு..

ஆதி சிவனுக்கு அன்னமிட்ட கையழகி

இவ்வுலக நாதனின் தேவியவள்

ஈகைக்கு எடுத்துக்காட்டவள்

உண்டி கொடுத்தோரை உயிர் கொடுப்போர் ஆக்குபவள்

ஊன்உடலுக்கு உறுதுணையானவள்

என்றும் என்றென்றும் நம் அன்னையவள்

ஏழு ஜென்ம பாவம் தீர்க்கும் தங்க அன்னபூரணி தரிசனம்

ஐங்கரன் துண்டி விநாயகர் தாயவள்

ஒரு விசாலாக்ஷியாகவும் வடிவெடுத்தவள்

ஓராறு முகனின் தாயுமானவள்

ஔவை தெய்வம் வடிவில் வந்த காஞ்சி மஹா பெரியவர் அருள் நம்மை என்றும் காக்கட்டும்.

Prof. V. V. Meenakshi Jayakumar