சரஸ்வதி

சரஸ்வதி

எடுப்பு

வீணை வாசிக்கும் கலைவாணி தாயே – காலம்

வீணாக்காமல் நான் கலை பெற அருள்வாய்

தொடுப்பு

ஆணை உன்மேலே தாயே கலை தர வருவாய்

துணையாக வேண்டும் உந்தன் அருள் நிதி கொடையே

முடிப்பு

அணை போல் காத்திடுவாய் – சரஸ்வதி தாயே

கணையாழி போல் வந்து கையில் பலம் தருவாய்

சுணை என அருள் சுரந்து காப்பாய் எனையே

வீணை என் வாழ்வின் ஒரு அங்கமாக மாற – வரம் ஒன்று தருவாய்

Prof. V. V. Meenakshi Jayakumar

கிளி

கிளி

Kili

ஆத்தோரம் ஆலமரம்

அதிலேவொரு நடு கிளை

அங்கவொரு கிளிக் குஞ்சு

அழகு கொஞ்சும் சின்னக் கிளி

அந்த கிளி பறந்து பறந்து

அம்மன் மேல அமர போகும்

அந்த கிளியாக நானிருக்க

அம்மா எனக்கு வரங்கொடு

  Prof. V. V. Meenakshi Jayakumar