கண்ணன்

கண்ணன்

kannan flute

கண்ணன் கையில் குழலாவேன் – நான்

கண்ணன் கையில் குழலாவேன் – என்

எண்ணங்கள் அனைத்தையும் அவனிடம் தந்து

குழலைப் போல் நான் உள்ளொன்றும் கொள்ளேன்

 

மண்ணைத் தின்று உலகம் படைப்பான் – என்

மனதைத் தின்று உவகை கொள்வான்

பண் கொண்டு பாடும் எந்தன் குரலில்

தேனாய் வந்து இனிமை கொடுப்பான்

 

விண்ணையும் மண்ணையும் காலால் அளப்பான்

வீணையில் இசையாய் என் வசம் வருவான்

அண்டமும் பிண்டமும் அவனே என்ற

உண்மையை எனக்கு அனுதினம் உரைப்பான்

Prof. V. V. Meenakshi Jayakumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *