Thiruvaasagam

திருச்சாழல்

(தில்லையில் அருளியது)

சிவனுடைய காருணியம்

(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

255.

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை

ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.

Thiruvaasagam

குழைத்த பத்து

(திருப்பெருந்துறையில் அருளியது)

ஆத்தும நிவேதனம்

(அறுசீர் விருத்தம்)

501.

வேண்டத் தக்க  தறிவோய்நீ

வேண்ட முழுதுந் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள்செய்தாய்

யானுமதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன் றுண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே.

 

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ என் கண்ணே

ஆராரோ ஆரிரரோ

தெய்வங்கள் பெருமாள்பிள்ளை ஆராரோ ஆரிரரோ

செய்வாய் பல தவமே நீ ஆராரோ ஆரிரரோ

மெய்வாய் புலன் அடக்கி வளர் ஆராரோ ஆரிரரோ

சிவபூஜை தனை செய்வாய் ஆராரோ ஆரிரரோ

தவயோகம் தான் புரிவாய் ஆராரோ ஆரிரரோ

உலகன்னை பாதம் பிடி ஆராரோ ஆரிரரோ

மலம் மூன்றும் போக்கிடுவாள் ஆராரோ ஆரிரரோ

அன்னையும் அப்பனும் அவளே ஆராரோ ஆரிரரோ

துன்பத்தை நீக்குபவள் அவளே ஆராரோ ஆரிரரோ

என் கண்ணே கண் வளராய் ஆராரோ ஆரிரரோ

சன்மார்க்கத்தில் மூழ்கிடுவாய் ஆராரோ ஆரிரரோ

உமையவள் வடிவழகு உரைக்க ஒரு சொல்லுமில்லை

இமைக்காமல் பார்த்திடவே என்னால் முடியவில்லை

உதிக்கின்ற செங்கதிர் உமையவள் மேனி

துதிக்கின்ற என் சிறு சொற்கள் உமையவள் அருளே

மதிக்கின்ற சிவனுடைய உடலோ அவளில் பாதி

விதிக்கின்ற என்னுடைய வாழ்வு உமையவள் அருளே

சிவகாமி அருள்வாமி அபிராமி அருள்வாமி

Prof. V.V. Meenakshi Jayakumar

கதிரவன் கவசம்

கதிரவன் கவசம்

ஞான ஆசிரியன் நீயே ஞாயிறு தேவா

ஞான ஆசிரியன் நீயே

மோனமாய் கல்வி  புகட்டும் சிவனின் ரூபம் நீயே

கானமாய் கலைகள் அருளும் கண்ணனின் ரூபம்  நீயே

ஆன சுகம் தந்திடுவாய் தன் பாதிரி ரூபம் நீயே – சுப

மான எல்லாம் தந்தே அருளும் ஆரோக்கிய தேவன் நீயே

Prof. V.V. Meenakshi Jayakumar

அன்னாபிஷேகம்

annabhishegam

அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம் கண்டவர் கலி தீரும்

ஆண்டவன் நமக்கு அருள் தரும் நாள்

இந்த நாளில் இந்த அன்ன கோலத்தில்

ஈசனைக் கண்டால்

உண்மை பொருள் சேரும்

ஊழ்வினை அகலும்

எண்ணியதெல்லாம்

ஏற்றபடி நடக்கும்

ஐங்கரன் தந்தை நம்மை என்றும் காப்பான்

ஒரு நூறு ஜென்ம பாவம்

ஓடியே போகும்

ஔடதமே இப்பிறவி பிணிக்கு அன்னாபிஷேகமே..

காஞ்சி மஹா பெரியவர் அருள் என்றென்றும் நமக்கு இருக்கட்டும்.

Prof. V. V. Meenakshi Jayakumar

போற்றி ஓம் நமச்சிவாய

போற்றி ஓம் நமச்சிவாய

 Shiva

போற்றி ஓம் நமச்சிவாய

புயங்கனே மயங்கு கின்றேன்

போற்றி ஓம் நமச்சிவாய

புகல் இடம் பிறிது ஒன்று இல்லை

போற்றி ஓம் நமச்சிவாய

புரம் எனைப் போக்கல் கண்டாய்

போற்றி ஓம் நமச்சிவாய

சய சய போற்றி போற்றி

ஒருவனே போற்றி ஒப்பு இல் அப்பனே போற்றி

குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி

வருக என்று என்னை நின் பால்

வாங்கிட வேண்டும் போற்றி

தருக நின் பாதம் போற்றி

தமியனேன் தனிமை தீர்ந்து

Prof. V. V. Meenakshi Jayakumar

Mangalam Ramar, Guru, Sivan and Hanuman

பல்லவி

மங்களம் மங்களம் சங்கர குருவிற்கு மங்களம்

செய மங்களம் சுப மங்களம் ஜெய மங்களம் என்றும் சுப மங்களம்

அனுபல்லவி

தங்கும் இன்பம் பேரின்பமாக

எங்கும் இனிமேல் மங்களம்

பங்கில் உமையை கொண்ட பரமன்

எங்கள் குறைதீர்க்க குருவாய் வந்தார் – மங்களம்

சரணம்

வீங்கிய தாடை உடைய அனுமன்

பாங்கிய அழகில் நின்ற அனுமன்

ஓங்கிய புகழை கொண்ட அனுமன்

தூங்கும் ஆன்மாவை எழுப்பும் அனுமன் – மங்களம்

  • Prof.V.V.Meenakshi Jayakumar