Thiruvaasagam

குழைத்த பத்து

(திருப்பெருந்துறையில் அருளியது)

ஆத்தும நிவேதனம்

(அறுசீர் விருத்தம்)

501.

வேண்டத் தக்க  தறிவோய்நீ

வேண்ட முழுதுந் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள்செய்தாய்

யானுமதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன் றுண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே.