ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ என் கண்ணே

ஆராரோ ஆரிரரோ

தெய்வங்கள் பெருமாள்பிள்ளை ஆராரோ ஆரிரரோ

செய்வாய் பல தவமே நீ ஆராரோ ஆரிரரோ

மெய்வாய் புலன் அடக்கி வளர் ஆராரோ ஆரிரரோ

சிவபூஜை தனை செய்வாய் ஆராரோ ஆரிரரோ

தவயோகம் தான் புரிவாய் ஆராரோ ஆரிரரோ

உலகன்னை பாதம் பிடி ஆராரோ ஆரிரரோ

மலம் மூன்றும் போக்கிடுவாள் ஆராரோ ஆரிரரோ

அன்னையும் அப்பனும் அவளே ஆராரோ ஆரிரரோ

துன்பத்தை நீக்குபவள் அவளே ஆராரோ ஆரிரரோ

என் கண்ணே கண் வளராய் ஆராரோ ஆரிரரோ

சன்மார்க்கத்தில் மூழ்கிடுவாய் ஆராரோ ஆரிரரோ

உமையவள் வடிவழகு உரைக்க ஒரு சொல்லுமில்லை

இமைக்காமல் பார்த்திடவே என்னால் முடியவில்லை

உதிக்கின்ற செங்கதிர் உமையவள் மேனி

துதிக்கின்ற என் சிறு சொற்கள் உமையவள் அருளே

மதிக்கின்ற சிவனுடைய உடலோ அவளில் பாதி

விதிக்கின்ற என்னுடைய வாழ்வு உமையவள் அருளே

சிவகாமி அருள்வாமி அபிராமி அருள்வாமி

Prof. V.V. Meenakshi Jayakumar