திரு. பா. முத்துக்குமார சாமி ஐயா

திரு. பா. முத்துக்குமார சாமி ஐயா

அன்பானவர் மிக பண்பானவர் ஐயா.

ஆற்றலின் வடிவமே உருவானவர் ஐயா

இனிய தமிழிசையை என்றும் இசைத்தவர் ஐயா

ஈசனை போலவே குருவை பணிந்தவர் ஐயா

உலக இச்சைகளில் சிக்காதவர் ஐயா

ஊர் உலகம் போற்றும் படி வாழ்ந்து மறைந்தவர் ஐயா

எண்ணத்திலே எப்போதும் தமிழிசையை

ஏற்றமான வாழ்வினை பல மாணவர்களுக்கு தந்தவர் ஐயா

ஐயா என்றே அனைவராலும் போற்றப்பட்டவர்

ஒரு புகழ்மிக்க குடும்பத்தின் தலைவரானவர் ஐயா

ஓங்கார இசை நாதத்தை என்றும் பாடியவர் ஐயா

ஔவை தெய்வம் முருகனின் பாதத்தில் சேர்ந்தவர்

காஞ்சி   மகா    பெரியவரின்    ஆசி    பெற்ற    ஐயா   சங்கீத  பூஷணம்  திரு. பா. முத்துக்குமாரசாமி அவர்களின் புகழ் என்றும் வாழ்க! வாழ்க !

நன்றி,

அன்புடன்   பேரா. வே.வெ. மீனாட்சி

Prof. V.V. Meenakshi Jayakumar

கந்தனே முருகா

கந்தனே முருகா

karthikeyan

 

மெட்டு: அயிகிரி நந்தினி                          தாளம்: ஆதி

கந்தனே முருகா கருத்தினில் நிறைந்தவா

உன்மேல் நான் பாட ஆசை கொண்டேன்

எனக்கருள் புரிவாய் என் நாவில் வருவாய்

ஏழை நான் பாடுவதை ஏற்றுக் கொள்வாய்

வந்தருள் புரிவாய் வள்ளி மணாளா

பக்தியும், ஞானமும் தந்தருள்வாய்

சுவாமி நாதனாய் வந்தவன் நீயே

சுருதியோடு லயஞானம் தந்திடப்பா

கந்தனே முருகா!

Prof. V.V. Meenakshi Jayakumar