கந்தனே முருகா

கந்தனே முருகா

karthikeyan

 

மெட்டு: அயிகிரி நந்தினி                          தாளம்: ஆதி

கந்தனே முருகா கருத்தினில் நிறைந்தவா

உன்மேல் நான் பாட ஆசை கொண்டேன்

எனக்கருள் புரிவாய் என் நாவில் வருவாய்

ஏழை நான் பாடுவதை ஏற்றுக் கொள்வாய்

வந்தருள் புரிவாய் வள்ளி மணாளா

பக்தியும், ஞானமும் தந்தருள்வாய்

சுவாமி நாதனாய் வந்தவன் நீயே

சுருதியோடு லயஞானம் தந்திடப்பா

கந்தனே முருகா!

Prof. V.V. Meenakshi Jayakumar

இசை – இசை நாடகம்

வணக்கம்.

அடியார் புராணம்

திரு நாளைப் போவார்….

சற்றே விலகியிரும் பிள்ளாய் – சன்னிதானம் மறைக்குதாமே – நீ
நற்றவம் புரியும் நம்மிடம் திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்.

சாதி முறைமை பேசுறான் தன்னை இகழ்ந்துமேசுறான்

கோதில்லா குணமுடையோன் கோபங்கொண்டால் தாள மாட்டாய்……

சற்றே விலகியிரும் பிள்ளாய் – சன்னிதானம் மறைக்குதாமே – நீ
நற்றவம் புரியும் நம்மிடம் திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்.

வேத குலத்தை போற்றுறான் விரும்பி விரும்பி ஏற்றுறான்

பூதலத்தில் இவனைப் போலே புண்ணிய புருஷ னொருவனில்லை……

சற்றே விலகியிரும் பிள்ளாய் – சன்னிதானம் மறைக்குதாமே – நீ
நற்றவம் புரியும் நம்மிடம் திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்.

பக்தியில் கரைக் கண்டவன் பார்த்து பார்த்து உண்பவன்

சித்தங் குறையில் நமது செல்வம் முற்றங்குறையும் தயவுசெய்து…

சற்றே விலகியிரும் பிள்ளாய் – சன்னிதானம் மறைக்குதாமே – நீ
நற்றவம் புரியும் நம்மிடம் திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்.

ஒரு சிறந்த பக்தரின் கதை – நந்தனார் ...

—- கோபால கிருஷ்ண பாரதியார்.