கந்தனே முருகா

கந்தனே முருகா

karthikeyan

 

மெட்டு: அயிகிரி நந்தினி                          தாளம்: ஆதி

கந்தனே முருகா கருத்தினில் நிறைந்தவா

உன்மேல் நான் பாட ஆசை கொண்டேன்

எனக்கருள் புரிவாய் என் நாவில் வருவாய்

ஏழை நான் பாடுவதை ஏற்றுக் கொள்வாய்

வந்தருள் புரிவாய் வள்ளி மணாளா

பக்தியும், ஞானமும் தந்தருள்வாய்

சுவாமி நாதனாய் வந்தவன் நீயே

சுருதியோடு லயஞானம் தந்திடப்பா

கந்தனே முருகா!

Prof. V.V. Meenakshi Jayakumar