அருணோதயம்

கீர்த்தனை

எடுப்பு

அருணோதயம் வருகவே வருக (2)

இருள் அது நீங்கி நல் ஒளி பரவ – அருணோதயம்

தொடுப்பு

தருமம் பெருக நல்வாழ்வு சிறக்க

பெருமை அது பொங்க பேதமை நீங்க

அருணோதயம்

முடிப்பு

அரும்பணி பல செய்ய ஆத்ம பலம் உயர

ஆருயிர் அனைத்தும்  அன்புடன் திகழ

இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழ – இனி

வரும் நாட்களில் அமைதியும் வளர

அருணோதயம்

Prof. V.V. Meenakshi Jayakumar

 

 

மின்னல்

மின்னல்

எடுப்பு

மின்னல் போல் மறையும் வாழ்வில் ஏனோ மனக்குமறல்கள்

கன்னல் அன்பு கொண்டிடுவோம் கண்ணன் புகழ் பாடீயே

தொடுப்பு

அன்னையும் அப்பனும் ஒவ்வொரு பிறப்பாலும் வேறே

அன்பு கொண்ட மனைவியும் ஒவ்வொரு பிறப்பிலும் வேறே – மின்னல்

முடிப்பு

உள்ளமதில் அன்பு வைப்போம் வெள்ளை உள்ளம் கொண்டிடுவோம்

அள்ள அள்ள அன்பு தருவோம் கள்ள மனதை விரட்டுவோம்

Prof. V.V. Meenakshi Jayakumar

திரு. பா. முத்துக்குமார சாமி ஐயா

திரு. பா. முத்துக்குமார சாமி ஐயா

அன்பானவர் மிக பண்பானவர் ஐயா.

ஆற்றலின் வடிவமே உருவானவர் ஐயா

இனிய தமிழிசையை என்றும் இசைத்தவர் ஐயா

ஈசனை போலவே குருவை பணிந்தவர் ஐயா

உலக இச்சைகளில் சிக்காதவர் ஐயா

ஊர் உலகம் போற்றும் படி வாழ்ந்து மறைந்தவர் ஐயா

எண்ணத்திலே எப்போதும் தமிழிசையை

ஏற்றமான வாழ்வினை பல மாணவர்களுக்கு தந்தவர் ஐயா

ஐயா என்றே அனைவராலும் போற்றப்பட்டவர்

ஒரு புகழ்மிக்க குடும்பத்தின் தலைவரானவர் ஐயா

ஓங்கார இசை நாதத்தை என்றும் பாடியவர் ஐயா

ஔவை தெய்வம் முருகனின் பாதத்தில் சேர்ந்தவர்

காஞ்சி   மகா    பெரியவரின்    ஆசி    பெற்ற    ஐயா   சங்கீத  பூஷணம்  திரு. பா. முத்துக்குமாரசாமி அவர்களின் புகழ் என்றும் வாழ்க! வாழ்க !

நன்றி,

அன்புடன்   பேரா. வே.வெ. மீனாட்சி

Prof. V.V. Meenakshi Jayakumar