முருகன் பாட்டு

பல்லவி
மனமே மனமே அமைதி கொள்வாய்
மனத்துக்கினிய மருத்துவன் முருகன் உள்ளான்
-மனமே மனமே

அனுபல்லவி
தினமே தினமே அவன் புகழ் பாடு
தினகரனாய் வருவான் நம் பிழை பொறுப்பான்
– மனமே மனமே

சரணம்
முருகன் குமரன் குகன் என்று பாடு
வருவான் மயில் மேல் நம் குறை தீர்க்க
அருளும் தருவான் அன்பும் தருவான்
இருளும் களையும் ஒளியுடன் வாழ
– மனமே மனமே

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

முருகன் பாட்டு

பல்லவி
கந்தனே உனை நான் அழைக்கின்றேன்
சுந்தரனே நீ உடனே வா வா வா
– அழகு

அனுபல்லவி
சந்ததமும் நான் தொழுகின்றேன் – உனை
வந்தனை செய்தே நான் வாழ்கின்றேன்
– அழகு

சரணம்
ஆனைமுகன் சோதரனே அழகு தெய்வமே
ஊனை உருக்கும் தமிழ் இசை நாயகனே
ஏனைய தெய்வங்கள் இருந்தாலும் – சுட்ட
பானைபோல் வினையை நீக்கிடும் – அப்பா
– அழகு

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்