விநாயகார் பாட்டு

பல்லவி
வரணும் வரணும் விநாயகா
சரணம் சரணம் விநாயகா
அருள வரணும் விநாயகா
பரம கருணை வடிவானவா

அனுபல்லவி
வந்தி பிட்டுக்கு சென்ற தந்தையின் வரபுதல்வா நீ
குந்தி வீட்டுக்கு சென்ற கண்ணனின் மனம் நிறைந்தவா
– வரணும் வரணும்

சரணம்
குழந்தைகளின் தெய்வம் நீயே
பெரியோர்களின் தெய்வம் நீயே
தேவர்களின் தெய்வம் நீயே
விஜய் மீனாட்சியின் தெய்வம் நீயே
– வரணும் வரணும்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி

முருகன் பாட்டு

பல்லவி
கந்தனே உனை நான் அழைக்கின்றேன்
சுந்தரனே நீ உடனே வா வா வா
– அழகு

அனுபல்லவி
சந்ததமும் நான் தொழுகின்றேன் – உனை
வந்தனை செய்தே நான் வாழ்கின்றேன்
– அழகு

சரணம்
ஆனைமுகன் சோதரனே அழகு தெய்வமே
ஊனை உருக்கும் தமிழ் இசை நாயகனே
ஏனைய தெய்வங்கள் இருந்தாலும் – சுட்ட
பானைபோல் வினையை நீக்கிடும் – அப்பா
– அழகு

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்