பெருமாள்

பல்லவி
பள்ளி கொண்ட பெருமான் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
– பள்ளி கொண்ட

அனுபல்லவி
துள்ளி வரும் காவேரி கரையில்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
வள்ளி முருகனின் மாமன் அவர்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்

சரணம்
ஆழ்வார்கள் பாடிய அருள் அரங்கன்
பாழ்வான வாழ்வு மாற அருள் அரங்கன்
தாழ்வான நிலை மாறும் அவன் அருள் சுரந்தால்
வாழ்வான வாழ்வு வாழ பிரபந்தம் பாடுவோம்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

விநாயகார் பாட்டு

பல்லவி
வரணும் வரணும் விநாயகா
சரணம் சரணம் விநாயகா
அருள வரணும் விநாயகா
பரம கருணை வடிவானவா

அனுபல்லவி
வந்தி பிட்டுக்கு சென்ற தந்தையின் வரபுதல்வா நீ
குந்தி வீட்டுக்கு சென்ற கண்ணனின் மனம் நிறைந்தவா
– வரணும் வரணும்

சரணம்
குழந்தைகளின் தெய்வம் நீயே
பெரியோர்களின் தெய்வம் நீயே
தேவர்களின் தெய்வம் நீயே
விஜய் மீனாட்சியின் தெய்வம் நீயே
– வரணும் வரணும்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி

முருகன் பாட்டு

பல்லவி
மனமே மனமே அமைதி கொள்வாய்
மனத்துக்கினிய மருத்துவன் முருகன் உள்ளான்
-மனமே மனமே

அனுபல்லவி
தினமே தினமே அவன் புகழ் பாடு
தினகரனாய் வருவான் நம் பிழை பொறுப்பான்
– மனமே மனமே

சரணம்
முருகன் குமரன் குகன் என்று பாடு
வருவான் மயில் மேல் நம் குறை தீர்க்க
அருளும் தருவான் அன்பும் தருவான்
இருளும் களையும் ஒளியுடன் வாழ
– மனமே மனமே

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்