பெருமாள்

பல்லவி
பள்ளி கொண்ட பெருமான் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
– பள்ளி கொண்ட

அனுபல்லவி
துள்ளி வரும் காவேரி கரையில்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
வள்ளி முருகனின் மாமன் அவர்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்

சரணம்
ஆழ்வார்கள் பாடிய அருள் அரங்கன்
பாழ்வான வாழ்வு மாற அருள் அரங்கன்
தாழ்வான நிலை மாறும் அவன் அருள் சுரந்தால்
வாழ்வான வாழ்வு வாழ பிரபந்தம் பாடுவோம்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்