முருகன் பாட்டு

பல்லவி
கந்தனே உனை நான் அழைக்கின்றேன்
சுந்தரனே நீ உடனே வா வா வா
– அழகு

அனுபல்லவி
சந்ததமும் நான் தொழுகின்றேன் – உனை
வந்தனை செய்தே நான் வாழ்கின்றேன்
– அழகு

சரணம்
ஆனைமுகன் சோதரனே அழகு தெய்வமே
ஊனை உருக்கும் தமிழ் இசை நாயகனே
ஏனைய தெய்வங்கள் இருந்தாலும் – சுட்ட
பானைபோல் வினையை நீக்கிடும் – அப்பா
– அழகு

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *