ராமர்

ராமர்

ramar

அயோத்தி அரசன் தசரதனாம்

ஆம் இவன் மிகவும் நல்லவனாம்

இராணியர் மூவர் இருந்தாலும்

ஈண்டு இன்னும் குழந்தை இல்லை

உண்மைத் துறவி ரிஷ்யசிங்கர்

ஊர்  போற்ற புத்ர யாகம் செய்தாரே

எண்ணியது அருளும் பாயாசமும்

ஏற்ற இராணியர் பருகினரே

ஐயன் நாரணன் இராமனாயும்

ஒப்பில்லா பரதனும் லட்சுமணனும்

ஓங்கு புகழ் கொண்ட சத்ருகனும்

ஔஷதம் போலே வந்துதித்தனர்

Prof. V. V. Meenakshi Jayakumar

இராமன்

இராமன்

இராமன்

 

எடுப்பு

குலதெய்வம் இராமன் அருளுண்டு நமக்கு

பலகாலும் சொல்கிறேன் பவபயமில்லை

                                                                        – குலதெய்வம்

 

தொடுப்பு

சிலகாலம் துதித்தாலும் போதுமே – நாளில்

சிலகாலம் துதித்தாலும் போதுமே – இராமனருள் முன்னிற்கும் என்றுமே

– குலதெய்வம்

முடிப்பு

பவசாகரம் கரையேற வைப்பான் இராமன்

தவயோக வாழ்வு தந்து காப்பான் இராமன்

லவகுசனின் தந்தையவன் சீதா இராமன்

சிவயோகம் தந்திடுவான் தசரத இராமன்

– குலதெய்வம்

Prof. V. V. Meenakshi Jayakumar