ராமர்

ராமர்

ramar

அயோத்தி அரசன் தசரதனாம்

ஆம் இவன் மிகவும் நல்லவனாம்

இராணியர் மூவர் இருந்தாலும்

ஈண்டு இன்னும் குழந்தை இல்லை

உண்மைத் துறவி ரிஷ்யசிங்கர்

ஊர்  போற்ற புத்ர யாகம் செய்தாரே

எண்ணியது அருளும் பாயாசமும்

ஏற்ற இராணியர் பருகினரே

ஐயன் நாரணன் இராமனாயும்

ஒப்பில்லா பரதனும் லட்சுமணனும்

ஓங்கு புகழ் கொண்ட சத்ருகனும்

ஔஷதம் போலே வந்துதித்தனர்

Prof. V. V. Meenakshi Jayakumar