ANNAI ABHIRAMAI

அபிராமி

அபிராமி பட்டருக்கு அருளிய அபிராமி

ஆற்றல் பல தருபவள் அபிராமி

இனிய வீணை இசைப்பவள் அபிராமி

ஈசனில் பாதியவள் அபிராமி

உலகளந்த நாயகி தான் அபிராமி

ஊக்கம் தரும் தெய்வமள்  அபிராமி

எங்கிருக்கும் சத்தியவள்  அபிராமி

ஏழிசையைத் தருபவள்  தான் அபிராமி

ஐங்கரனின் தாயானவள் அபிராமி

ஒரு முருகனின் அன்னை அவள் அபிராமி

ஓராயிரம் கண்கொண்டு காப்பாள் அபிராமி

ஔவியம் பேசா மொழி தருபவள் அபிராமி

 

PROF.V.V.MEENAKSHI JAYAKUMAR

திருக்குறள்

திருக்குறள்

 

Thiruvalluvar saffronisation triggers political row in Tamil Nadu | Chennai  News - Times of India

அகர முதல என்ற ஆரம்பிப்பது திருக்குறள்

ஆதி பகவன் புதல்வன் எழுதியது திருக்குறள்

இகபர சுகங்களை அறிய வைப்பது திருக்குறள்

ஈதலின் சிறப்பை எடுத்துக் கூறுவது திருக்குறள்

உலகப் பொதுமறையென போற்றப்படுவது திருக்குறள்

ஊடலையும் கூடலையையும் பற்றி உணர்த்துவது திருக்குறள்

எல்லா சமயத்தாருக்கும் நன்று சொல்வது திருக்குறள்

ஏழ்பிறவிக்கும் ஒரு அருமருந்தாவது திருக்குறள்

ஐயம் திரிபுற அனைத்துமாய் திகழ்வது திருக்குறள்

ஒப்புயர்வு இல்லாத ஒரு சிறந்த குறள் திருக்குறள்

ஒழுக்கத்தின் மேன்மையை போதிப்பது திருக்குறள்

ஓ இதுவே தமிழ்வேதம் என்று போற்றம்படுது திருக்குறள்

ஓதி உணர்ந்து செயல்படுத்த வேண்டியது திருக்குறள்

ஔவையால் தேவர்குறள் என போற்றப்பட்டது திருக்குறள்.

—-Prof. V.V.Meenakshi Jayakumar