அன்னை அபிராமி வாழி வாழி

குருஞானசம்பந்தர் – தருமைஆதினம்
அமுதகடேஸ்வரர் வாழி வாழி
அன்னை அபிராமி வாழி வாழி
கள்ள வாரண கணபதி வாழி
வள்ளிக் கணவன் முருகன் வாழி
எமதர்ம ராஜன் எப்போதும் காக்க
மாயா முனிவர் மார்க்கண்டேயர் வாழ்க
தேவார மூவரின் தெய்வத்தமிழ் வாழ்க
குங்கலியக் கலய நாயனார் வாழ்க
காரி நாயனார் வாழ்க
அபிராமி பட்டரின் அந்தாதி வாழ்க
தருமை ஆதினம் புகழும் ஓங்குக

PROF. DR. V.V.MEENAKSHI JAYAKUMAR

அபிராமி அருள் 6

இருளை ஒளி ஆக்குபவள் அபிராமி – மன
இருளைப் போக்குபவள் அபிராமி
ஈசனில் பாதி அவள் அபிராமி
உலக உயிர்களின் உயிரவள் அபிராமி
அகிலாண்ட நாயகி அவள் அபிராமி
அவளை நாடிச் செல்வோம் நாம் வாரீர் வாரீர்

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

ABIRAMI ARUL

பாற்கடல் கடைதல்
இளமையும் இறவாத் தன்மையும் என்றும்
அளிக்கவல்லது பாற்கடல் அமிர்தம்
அதனைப் பெறவே தேவரும் அசுரரும்
கடலைக் கடைய உறுதி கொண்டனர்

மந்திர மலையை மத்தாக்கினர்
சுந்தர வாசுகியைக் கயிறாக்கினர்
தந்திரமாகவே கடைய கடைய
இந்திரகுழாம் இன்புற்று வாழவே
இறவாப் பலன்தரும் அமுதம் வந்தது

அபிராமி அருள்

அன்னை அபிராமி தாயே அருள்வாயே
அமுதகடேஸ்வரர் தந்தையே அருள்வாயே
கள்ள வாரண கணபதியே வருவாயே
வள்ளிக் கணவன் முருகனே வருவாயே
மாயா முனிவராம் மார்க்கண்டேய அருள் தரவேணுமே
எமதர்ம ராஜன் நீ எமக்கு ஆயுள் அருள்வாயே
அமுத தமிழிசை தந்த தேவார மூவர் அருள் வேண்டுமே
அபிராமி பட்டரே பக்தி இசை தரவேண்டுமே
காரி குங்கலிய நாயனாரின் பக்தி நமக்கு வேண்டுமே
குருஞானசம்பந்தரும் தருமை ஆதினமும் அருள் தரவேண்டும்

பேரா,முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

ANNAI ABHIRAMAI

அபிராமி

அபிராமி பட்டருக்கு அருளிய அபிராமி

ஆற்றல் பல தருபவள் அபிராமி

இனிய வீணை இசைப்பவள் அபிராமி

ஈசனில் பாதியவள் அபிராமி

உலகளந்த நாயகி தான் அபிராமி

ஊக்கம் தரும் தெய்வமள்  அபிராமி

எங்கிருக்கும் சத்தியவள்  அபிராமி

ஏழிசையைத் தருபவள்  தான் அபிராமி

ஐங்கரனின் தாயானவள் அபிராமி

ஒரு முருகனின் அன்னை அவள் அபிராமி

ஓராயிரம் கண்கொண்டு காப்பாள் அபிராமி

ஔவியம் பேசா மொழி தருபவள் அபிராமி

 

PROF.V.V.MEENAKSHI JAYAKUMAR