திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி

(திருப்பெருந்துறையில் அருளியது)

திரோதன சுத்தி

(எண்சீர் விருத்தம்)

369.

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழஎழ நயனக்

கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்

திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

அருன்நிதி தரவரும் ஆனந்த மலையே

அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.

திருவாசகம்

திருவாசகம்

திருச்சாழல்

(தில்லையில் அருளியது)

சிவனுடைய காருணியம்

(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

257.

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்

காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.

மாணிக்கவாசகர்

வணக்கம்.

மாணிக்கவாசகர் – திருவாசகம் என்னும் தேன் தந்தவர்.

திருக்கோவை என்னும் நன்னூல் தந்தவர்.

இறைவன்:

 

 

பாலைக் கொடுத்து ஆட்கொண்டது திருஞான சம்பந்தரை

சூலைக் கொடுத்து ஆட்கொண்டது திரு நாவுக்கரசரை

ஓலைக் கொடுத்து ஆட்கொண்டது சுந்தரரை

காலைக் கொடுத்து ஆட்கொண்டது மாணிக்கவாசகரை.

 

நாலு பேர் போன வழியில் போ என்று நம் பெரியோர் குறிப்பிட்ட நாலு பேர் இவர்கள் தான்.

மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் 51 பதிகங்கள் கொண்டது.

 

மாணிக்கவாசகர் Archives | Tamil Minutes

பண் பற்றிய செய்திகள் குறைவாகவே காணப்படுகிறது.

ஆனால், இசைக் கருவிகள் பற்றிய செய்திகள் பல காணப்படுகிறது.

மாணிக்கவாசகரின் பாடல்கள் பாடப்பெறம் இராகங்கள்:

திருவாசகம் – மோகனம்

திருப்பள்ளியெழுச்சி – பூபாளம்

திருப்பொன்னூஞ்சல் – ஆனந்த பைரவி

திருச்சாழல் – ஆனந்த பைரவி, ஆரபி

சிவபுராணம் & பிற அகவல் – சங்கராபரணம்.

மாணிக்கவாசகர் முக்தி

 

இறைவனால் ஈர்க்கப்பட்ட ...

தான் இயற்றிய திருவாசகத்தின் பொருள் தில்லைக் கூத்தனே என்று கூறி தில்லை நடராஜ பெருமானுடன் கலந்தார்.

 

 

திருமந்திரச் சிறப்பு

திருமந்திரச் சிறப்பு

தேவர் குறளும்

திருநான் மறை முடிவும்

மூவர் தமிழும்

முனி மொழியும்

கோவை திருவாசகமும்

திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்று உணர்..

……ஔவையார்