திருச்சந்த விருத்தம்

பல்லவி
திருச்சந்த விருத்தம் தந்த
திருமழிசைபிரான் வாழியே – திருச்சந்த விருத்தம்

அனுபல்லவி
திருமால் கொண்டது பல கோலம் – அதில்
திருசயனம் பற்றிய பாடல்கள் பலஉள்ள – திருச்சந்த விருத்தம்

சரணம்
பக்தி பாசனம் செய்யச் சொன்னார் – இவர்
முக்தி பெற வழி இதுவே அன்றே சொன்னார்.
சக்தி பெற வேண்டுமெனில் திருமால் பாதம்கதி
உக்தி இதுவே பிரபந்தங்களின் வழிநின்று – திருச்சந்த விருத்தம்

—-பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

மாணிக்கவாசகர்

வணக்கம்.

மாணிக்கவாசகர் – திருவாசகம் என்னும் தேன் தந்தவர்.

திருக்கோவை என்னும் நன்னூல் தந்தவர்.

இறைவன்:

 

 

பாலைக் கொடுத்து ஆட்கொண்டது திருஞான சம்பந்தரை

சூலைக் கொடுத்து ஆட்கொண்டது திரு நாவுக்கரசரை

ஓலைக் கொடுத்து ஆட்கொண்டது சுந்தரரை

காலைக் கொடுத்து ஆட்கொண்டது மாணிக்கவாசகரை.

 

நாலு பேர் போன வழியில் போ என்று நம் பெரியோர் குறிப்பிட்ட நாலு பேர் இவர்கள் தான்.

மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் 51 பதிகங்கள் கொண்டது.

 

மாணிக்கவாசகர் Archives | Tamil Minutes

பண் பற்றிய செய்திகள் குறைவாகவே காணப்படுகிறது.

ஆனால், இசைக் கருவிகள் பற்றிய செய்திகள் பல காணப்படுகிறது.

மாணிக்கவாசகரின் பாடல்கள் பாடப்பெறம் இராகங்கள்:

திருவாசகம் – மோகனம்

திருப்பள்ளியெழுச்சி – பூபாளம்

திருப்பொன்னூஞ்சல் – ஆனந்த பைரவி

திருச்சாழல் – ஆனந்த பைரவி, ஆரபி

சிவபுராணம் & பிற அகவல் – சங்கராபரணம்.

மாணிக்கவாசகர் முக்தி

 

இறைவனால் ஈர்க்கப்பட்ட ...

தான் இயற்றிய திருவாசகத்தின் பொருள் தில்லைக் கூத்தனே என்று கூறி தில்லை நடராஜ பெருமானுடன் கலந்தார்.