திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி

(திருப்பெருந்துறையில் அருளியது)

திரோதன சுத்தி

(எண்சீர் விருத்தம்)

369.

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழஎழ நயனக்

கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்

திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

அருன்நிதி தரவரும் ஆனந்த மலையே

அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.

திருவாசகம்

திருவாசகம்

திருச்சாழல்

(தில்லையில் அருளியது)

சிவனுடைய காருணியம்

(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

257.

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்

காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.