கண்ணன் பாட்டு

பல்லவி
எம்பிரான் கண்ணனயே என் மனம் பாடுமே
எம்குறை தீர்ப்பவனின் பதத்தையே பாடுமே
-எம்பிரான்

அனுபல்லவி
தம்பிரான் அன்பினில் கட்டுப்பட்டவன் கண்ணன்
அம்பிரான் அன்பினில் கட்டுப்பட்டன் கண்ணன்

சரணம்
அம்பரமும் தண்ணீரும் அவனது படைப்பு
அதில் ஒட்டாமல் வாழ்வது அவனது சிறப்பு
அனைத்திற்கும் ஆதாரம் அவன் அதிலேது மறுப்பு?
அவன் அருள் பாடுகிறேன் இதிலென்ன வியப்பு?
– எம்பிரான்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

கண்ணன் பாட்டு

பல்லவி
ஆலிலைமேல் பள்ளி கொண்டாய் கண்ணா கண்ணா
-நீ ஆலிலைமேல் என்மன

அனுபல்லவி
என் மனத் துளியிலே பள்ளி கொள்ள வருவாய் கண்ணா கண்ணா
மாலியாக வருவாயே என் கண்மணி கண்ணா

சரணம்
உன் கையில் புல்லாங்குழல் என் மனம் ஆகவே
உள்ஒன்றும் இல்லாமல் இருப்பது சுகமே
புள்ளின் மேல் வருவாய் என் குறை தீர்ப்பாய்
என் கருத்திலும் கண்ணிலும் நிறைந்தவன் நீ தானே
– ஆலிலைமேல்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்