கண்ணன் பாட்டு

பல்லவி
ஆலிலைமேல் பள்ளி கொண்டாய் கண்ணா கண்ணா
-நீ ஆலிலைமேல் என்மன

அனுபல்லவி
என் மனத் துளியிலே பள்ளி கொள்ள வருவாய் கண்ணா கண்ணா
மாலியாக வருவாயே என் கண்மணி கண்ணா

சரணம்
உன் கையில் புல்லாங்குழல் என் மனம் ஆகவே
உள்ஒன்றும் இல்லாமல் இருப்பது சுகமே
புள்ளின் மேல் வருவாய் என் குறை தீர்ப்பாய்
என் கருத்திலும் கண்ணிலும் நிறைந்தவன் நீ தானே
– ஆலிலைமேல்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *