அன்னை கங்கை நதி

அன்னை கங்கை நதி போற்றி
ஆனந்த சிவன் தலை அமர்ந்தாள் போற்றி
இளமை முருகனின் தாய் போற்றி
ஈரேழு உலகின் உயிர் போற்றி
உள்ளத்தில் நினைத்தாலே உடல் தூய்மை தருபவள் போற்றி
ஊரி ஒலிக்கும் வழிபாடு கொண்டாய் போற்றி
எப்போதும் வற்றாத நதி போற்றி
ஏழு தவம் செய்த பகீரதனுக்கு அருள் சுரந்தாய் போற்றி
ஐசுவரியம் அளிக்கும் அன்னை நீயே போற்றி
ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை கொண்டாய் போற்றி
ஒரு அய்யாவாள் கிணற்றில் வந்தருள் தந்தாய் போற்றி
ஓங்கார ஒலிகொண்ட மொழியாய் போற்றி
ஔவை தெய்வம் முருகனின் பக்தர்
முத்துஸ்வாமி தீஷிதருக்கு வீணை அளித்தாய் போற்றி

— பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *