கீர்த்தனை

பல்லவி
அருணோதயம் வருகவே வருக
இருள் அது நீங்கி நல்ஒளி பரவ – அருணோதயம்

அனுபல்லவி
தருமம் பெருக நல்வாழ்வு சிறக்க
பெருமை அது பொங்க பேதமை நீங்க – அருணோதயம்

சரணம்
அரும்பணி பல செய்ய ஆத்ம பலம் உயர
ஆருயிர் அனைத்தும் அன்புடன் திகழ
இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழ – இனி
வரும் நாட்களில் அமைதியும் வளர – அருணோதயம்

–பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *