கனவிலும்

கனவிலும்

எடுப்பு

கனவிலும் நினைக்கவில்லை கண்ணாளா

உனைப் பிரிவேன் என – கனவிலும்

தொடுப்பு

எனதுயிர் கண்மணியே தசரதன் மைந்தனே

உனதுயிர் நான் இங்கே தவிக்க எங்கு நீ தேடுகிறாயோ

முடிப்பு

பத்து தலை இராவணன் பித்து பிடித்து அலைகிறான்

ஏத்து உன் கோதண்டத்தை சாத்து அவன் மார்பினை நோக்கி

கனவிலும்

Prof. V.V. Meenakshi Jayakumar