Today’s special – new day – new life

NEW DAY – NEW LIFE – GET UP – WAKE UP – DO YOUR DUTY

 

காலைக் கதிரவன் உதித்து விட்டான்

கண்மணி நீயும் துயில் எழுவாய்

காத்துள்ள கடமைகளை நீ செய்வாய்

கந்தன் முருகன் அருள் புரிவான்

 

கீச்சு கீச்சுசென்று கூவும் குயில்கள்

குரல்களை கேட்டு துயில் எழுவாய்

பறவைகள் கூவுவது நமக்காக

பாயும் ஆறும் நமக்காக

நாளும் பிறந்தது நமக்காக – நவ

கோளும் இருப்பது நலம் பயக்க

புத்துணர்ச்சியுடன் எழுந்திடுவாய்

புதுநாள் வந்தது மகிழ்ந்திடுவாய்

தவற்றை திருத்திக் கொள்ள

தவமேற்ப்பாய் தசரதன் மைந்தன்

தயைபுரிவான் துணையும் வருவான்

எழுவாய் மகனே நீ எழுவாய்

எழுவாய் மகளே நீ எழுவாய்

  • Prof. V. V. Meenakshi Jayakumar