மனம் உருகுதையா

மனம் உருகுதையா

எடுப்பு

மனம் உருகுதையா – உன் பெயர் கேட்டாலே – என் மனம் உருகுதையா

தொடுப்பு

வனம் செல்ல தேவையில்லை – உனை துதிக்க

மனம் அதை அடக்கினாலே போதும் – என்

முடிப்பு

இனம் அதை நாடாமல் – அலையும் மனமே

கனம் பொருளும் தானே வரும் – உன் பெயர் துதித்தால் போதுமே

சனமும் புகழும் தன்னாலே தேடி வரும் உன் பெயர் துதித்தால் போதுமே

தனமும் அழகும் தானே வரும் – உன் பெயர் துதித்தால் போதுமே

    Prof. V. V. Meenakshi Jayakumar

விநாயகா

விநாயகா

vinayaga

எடுப்பு

எனையாள உடனே நீ வா விநாயகா

எனையாள உடனே நீ வா

 

தொடுப்பு

உமையவள் மைந்தனே ஓங்கு புகழ் பெற்றவனே

எமைக்காத்து அருளவே வேலுடன் நீயும் வருவாயே

 

முடிப்பு

இமையோர்கள் நாயகனே ஏனிந்த ஏற்றத்தாழ்வு

அமைதியின் வடிவனே சாந்த சொரூபனே

தமைச்சேர்ந்த அடியவர்தம் வினைத் தீர்க்கும் – விநாயகனே

சமையலில் நேர்த்தியும் சுவையும் தந்தருள்வாயே

 

உன்னை நம்பும் எனைக் காத்து

அருள்வாயே ஆண்டவனே

புன்னை மர தரு நிழலில் உள்ள

பன்னக சயனனே

தன்மையில் நானும் ஒரு சூரபத்மன் தானே

கண்மணி எனை நீ காத்து அருள்வாயே

கன்னம் அழகு கொண்ட லஷ்மியின் நாயகனே

இன்னும் ஒரு பிறவி இல்லாமல் அருள்வாயே

இன்னும் ஒரு பிறவி இல்லாமல் அருள்வாயே

Prof. V. V. Meenakshi Jayakumar