இசையும் இறைவனும்

இசையும் இறைவனும்

அன்பே சிவம் என்பது திருமூலம் வாக்கு

ஆண்டவனை அடைய பல மார்க்கம் உண்டு

இசைமூலம் இறைவனை அடைவது சிறப்பு மிக்கது

ஈசனே ஆடும் தெய்வமாக அம்பலத்தில் உள்ளார்

உலகைப்படைத்துக் காக்கும் பரமனுக்கு இசையே வடிவம்

ஊக்கத்துடன் இசை பயின்றால் ஆண்டவன் மகிழ்வான்

எங்கும் எதிலும் இசைவடிவான இறைவன் உள்ளார்

ஏற்றமான வாழ்வுப்பெற வழிவகுக்கும் இறையிசை

ஐயமே வேண்டாம் இசைபயில்வோம் நாம் இசைபயில்வோம்

ஒன்றுபட்ட உறுதியுடன் சுருதிதாள பாவத்துடன்

ஓங்கார பரமன் புகழ்பாடும் இசைபயில்வோம்

ஔவை அருளிய அகவல் தினமும்பாடி

காஞ்சிமகான் ஆசியினால் இசை பயில்வோம்.

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

அம்பலத்தரசே

அம்பலத்தரசே

எடுப்பு

ஆடி பாடி உன்னை நான் பணிந்திட

ஆசி கூறுவாய் அம்பலத்தரசே

தொடுப்பு

கூடி நாடி உன்னை சேவித்து மகிழவே

தேடி ஓடி வந்தேன் தேவாதி தேவனே

முடிப்பு

ஈடில்லாத ஒரு கலைத் தெய்வமே

ஏடில்லாத படி வாழ்வை மாற்றுவாய்

சாடி பாடும் என்னை காத்து அருளவே

ஓடி பாடி வரும் மீனாளைக் காத்திடு

Prof. V.V. Meenakshi Jayakumar