இசையும் இறைவனும்

இசையும் இறைவனும்

அன்பே சிவம் என்பது திருமூலம் வாக்கு

ஆண்டவனை அடைய பல மார்க்கம் உண்டு

இசைமூலம் இறைவனை அடைவது சிறப்பு மிக்கது

ஈசனே ஆடும் தெய்வமாக அம்பலத்தில் உள்ளார்

உலகைப்படைத்துக் காக்கும் பரமனுக்கு இசையே வடிவம்

ஊக்கத்துடன் இசை பயின்றால் ஆண்டவன் மகிழ்வான்

எங்கும் எதிலும் இசைவடிவான இறைவன் உள்ளார்

ஏற்றமான வாழ்வுப்பெற வழிவகுக்கும் இறையிசை

ஐயமே வேண்டாம் இசைபயில்வோம் நாம் இசைபயில்வோம்

ஒன்றுபட்ட உறுதியுடன் சுருதிதாள பாவத்துடன்

ஓங்கார பரமன் புகழ்பாடும் இசைபயில்வோம்

ஔவை அருளிய அகவல் தினமும்பாடி

காஞ்சிமகான் ஆசியினால் இசை பயில்வோம்.

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *