நெடுங்குண இராமர்

நெடுங்குண இராமர்

இராகம் : வசந்தா                           தாளம் : ஆதி

பல்லவி

நெஞ்சில் சின்முத்திரை காட்டும் இராமா

தஞ்சமென்று உனை அடைந்தேன் நெடுங்குண இராமா

நெஞ்சில்

அனுபல்லவி

வஞ்சமிலா மனம் கொண்ட உறவினைத் தருவாய்

பஞ்சம் பிணி ஏதுமின்றி உலகினைக் காப்பாய்-நெஞ்சில்

நெஞ்சில்

சரணம்

அஞ்சேல் நீ என்று அடைக்கலம் தருவாய்

வஞ்சிக் கொடி செங்கமல தாயாரின் தெய்வமே

சஞ்சலமற்ற தம்பி லட்சுமணன் உடன் இருக்க

அஞ்சனை மைந்தன் இராமாயணம் படிக்க

– நெஞ்சில் சின்முத்திரை

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *