நாலாயிர திவ்யப் பிரபந்தம் – தாழ் சடையும்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாம் திருவந்தாதி

தாழ் சடையும் நீள் முடியும், ஒண் மழுவும் சக்கரமும்,

சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் – சூழும்

திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,

இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.                           2344

 

       தாழ்ந்த சடையும், அழகிய மழுப்படையும், சுற்றி அணிந்துள்ள பாம்பணியும் வாய்ந்த வடிவம், நீண்ட திருமுடியும், திருவாழிப் படையும், பொன்னரைஞாணும் வாய்ந்த வடிவம் இரண்டும், அருவி பாயும் திருவேங்கடம் உடையானுக்கு ஒரு சேரப் பொருந்திப் பொலியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *