கந்தனே

கந்தனே

எடுப்பு

கந்தனே குமரா கார்த்திகை மைந்தா

மைந்தா காத்தருள் புரிவாய் நீயே

தொடுப்பு

கண்ணனின் மருகனே முருகனே குகனே

பண்ணமைத்து பாடும் எங்களைக் காக்க வா

-கந்தனே குமரா

முடிப்பு

விண்ணோர் முதல்வனே உமையவள் புதல்வனே

கண்மணியே வள்ளியின் காதலனே வேலவனே

அண்டமாகி அவனியாகி அறியொனா பொருளதாகி

தொண்டர்தம் குருவுமாகி துகளறு தெய்வமே – முருகனே

சண்முகனே பாம்பன் சுவாமிகளின் தலைவனே

தன்மணி முகம் கொண்ட தெய்வானை நாயகனே

-கந்தனே குமரா

Prof. V. V. Meenakshi Jayakumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *