வேலவா

வேலவா

பன்னிருகை வடிவேலா பறந்தோடி நீயே வா வா

என்னிருகையால் தொழுதேன் உடனே நீ வா வா வா

அன்னத்தில் மேல் அமர்ந்த பிரமனிடம்

உன்னத ஓங்கார பொருள் கேட்பாய்

கன்னத்தில் கைவைத்தவர் தெரியாது என்ற போது

சன்னல் மட்டுமே கொண்ட ஒரு சிறையில் தான் அடைந்தாய்

உலகில் உற்பத்தி உடனே நின்ற போது

அலகில் ஜோதியான அம்பலவாணர் வந்து

தலமான சுவாமிமலையில் சீடனாக அமர்ந்து கேட்டார்

பல்வேறு குரு இருந்தாலும் தகப்பன்சாமி நீயே ஆனாய்

Prof. V. V. Meenakshi Jayakumar