அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

எடுப்பு

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

அஞ்ச மாட்டேன் எதற்கும் அஞ்ச மாட்டேன்

தொடுப்பு

கொஞ்சி பேசும் வள்ளி மணாளன் முருகனிடம்

தஞ்சமென்று சேர்ந்து விட்டேன் நான் – எனவே

முடிப்பு

பஞ்சு போல் பறந்திடும் பாவங்கள் எல்லாம்

எஞ்சி இருப்பது பண்ணிய புண்ணியங்கள் தானே

காஞ்சி வாழ் மஹா பெரியவா அருள் உண்டு என்றும்

வாஞ்சையுடனே அவர் உடன் காப்பார் எனவே

 – அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

Prof. V. V. Meenakshi Jayakumar