அருவி

அருவி

அருவி

அருவியாகிறேன் நான் அருவியாகிறேன்

ஆம் அம்மா நீர் உணர்ந்தது உண்மை தான்

இடர்களை களைவேன் நான்

ஈங்கு எனக்கென்று ஒரு பாதை வகுப்பேன்

உயர்ந்த இடத்தில் பிறந்து வந்தேன் – நான்

ஊர் போற்ற பரந்து விரிகிறேன்

எண்ணில்லா தடைகளை நான்

ஏற்றமுடன் கடந்து வருகிறேன்

ஐம்புலன்களையும் அடக்கி வருகிறேன் – நான்

ஒலி பல எழுப்பி வருகிறேன்

ஓடி ஓடி ஆடி வருகிறேன்

ஔடதம் பல என்னில் கொண்டு வருகிறேன்

அகிலம் பார்த்து விரிந்து வருகிறேன்

காஞ்சி மகா பெரியவரின் ஆசி பெற்று வருகிறேன்.

 

Prof. V. V. Meenakshi Jayakumar