அபிராமி அருள் 5 கள்ளவாரணர் விநாயகர்

கள்ளவாரணர் விநாயகர்

விநாயகர் வணக்கமின்றிச் செயல் தொடங்கினர்
விளைவு என்னவெனில் குடம் மறைந்தது
அமுதக்குடம் மறைந்தது
அமுதக்குடம் மறைத்து விநாயகர் கள்ளரானார்
கள்ள வாரணர் என்ற பெயரும் கொண்டர்

தேவர்களும் முனிவர்களும் தான் வேண்டிட
தேவகணங்களின் அதிபதி அமுதம் தந்தார்
அமிர்தம் உண்டனரே அனைவரும் அமிர்தம் உண்டனரே

செல்வோம் வாரீர் திருக்கடயூர்ச் செல்வோம் வாரீர்
கள்ள வாரண கணபதியைக் காணவே நாம்
இன்று செல்வோம் வாரீர் திருக்கடையூர் செல்வோம் வாரீர்
அள்ள அள்ள குறையாத அன்பமுதம் உள்ளது
ஆயுள் தரும் காயம் காக்கும் ஆற்றல் அங்கு உள்ளது
செல்வோம் வாரீர் திருக்கடையூர் செல்வோம் வாரீர்

PROF. DR. V.V.MEENAKSHI JAYAKUMAR