Guru Bhakthi

பல்லவி

மனமே மனமே குருபக்தி செய்

மயக்கம் தீர்க்கும் குருசரண் அடை – மனமே

அனுபல்லவி

சினமே தவிர்த்து தவமே தான் புரி

இனமே புரியாத இன்பநிலை அடை – மனமே

சரணம்

மாநிலத்தில் இருந்து குருபக்தி இல்லாமல்

மாதவம் செய்தாலும் பயன் ஏதும் இல்லை.

காமியத்தில் அமிழ்ந்து இளைக்காமல் காத்திடுவார்

சாமியாகி வந்து நம்மை கரையே ஏற வைப்பார் எனவே

 

Prof. V.V.Meenakshi Jayakumar