கல்லாடம்

கல்லாடம்

இராகம் : இந்தோளம்                              தாளம் : ஆதி

அருந்தமிழில் நூல்கள் பல்லாயிரம்

அதில் ஒன்றுதானே கல்லாடம்

அகம், புறம் குறுந்தொகை பாடியவர் வேறு

திருக்கண்ணப்பர் தேவர் திருமாறம் இயற்றியவர் வேறு

தொல்காப்பிய உரை எழுதியவர் வேறு

கல்லாடம் இயற்றிய கல்லாடர் வேறு

பல்வேறு கல்லாடர் வாழ்ந்துள்ளனர் என்று

பல்துறை அறிஞர்கள் ஆய்வாளர்கள் கூறுகின்றனரே

அகத்திணை பற்றிய நூல் இது தானே

ஜெகத்தினை வெற்றிக்கொள்ள வழி சொல்லும் நூலே

அகத்துறைக்கு ஒரு பாடலென நூறு பாடல்கள் உள்ளன கல்லாடத்தில்

இகபர சொல்தரும் கல்லாடம் தானே

காலத்தைப் பார்த்தால் ஆறுக்கு பிறகு கி.பி. ஆறுக்கு பிறகு

காரைக்கால் அம்மை குறிப்பிருப்பதாலே

காசிக்கு நிகரான மதுரை புகழ் பாடும்

கார்த்திகேயன் முருகனுடன் சிவன் பெருமை பேசும்

பல புராண கதைக் கொண்டது இந்நூல்

பண் உண்டாகும் முறை சொல்வது

பல தோற் கருவிகள் பட்டியல் இது தரும்

பகை கிளை இணை நட்பு விவரிக்கும் நூலே

அடியார்க்கு நல்லாரும் எடுத்துக் காட்டும் நூலே

அடி அமைப்பு 15 பதினைந்து முதல் அறுபத்தி ஆறே

குரலின் இனிமை பற்றி குரல் எழுப்பும் நூலே

யாழின் பெருமையினை எடுத்துக் கூறும் நூலே

நாரத் பேரியாழ், தும்புருயாழ்யுடன்

கீசக யாழ் தேவ மருத்துவயாழ்

எனப் பல யாழ் வகைகளை விவரிக்கும் நூலே

கல்லாடம் கற்றவரோடு சொல்லாடாதே

வில்போன்று சொற்கள் வரும் கல்லாடம் பயின்றால்

பல்காலம் சொல்கின்றேன் பயில்வோம் நாம் வாரீர்

கல்லாடம் பயில்வோம் நாம் சொல்லாடக் கற்போம்.

Prof. Dr. V.V. Meenakshi Jayakumar