அச்சோபதிகம்

அச்சோபதிகம்

முக்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனைப்

பக்தி நெறி அறிவித்துப் பழ வினைகள் பாறும் வண்ணம்

சித்தம் மலம் அறுவித்துச் சிவம் ஆக்கி எனை ஆண்ட

அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே.

செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை

மும்மை மலம் அறுவித்து முதல் ஆய முதல்வன் தான்

நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த

அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே.