நாலாயிர திவ்யப் பிரபந்தம் – கண்ணும் கமலம்

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த

மூன்றாம் திருவந்தாதி

 

கண்ணும் கமலம், கமலமே கைத்தலமும்,

மண் அளந்த பாதமும் மற்று அவையே, எண்ணில்

கருமாமுகில் வண்ணன், கார்க் கடல் நீர் வண்ணன்,

திருமாமணி வண்ணன் தேசு.                                   2290

 

       கரிய வானின் வடிவுடையவன், நீர் வண்ணன், பெரு விலையாய் எழில் ததும்பும் எம்பெருமான் அழகை நினைக்கப் புகுந்தால், திருக்கண்கள் தாமரைப்பூ, திருக்கைகளோ அத்தாமரை மலர், உலகளந்த திருவடிகளும் அந்தச் செந்தாமரையே.