நாலாயிரம்

பல்லவி
நாலாயிரம் நம் சொத்து
நாலாயிரம் நம் சொத்து
– நாலாயிரம் நம் சொத்து

அனுபல்லவி
பாலாயிரம் வேண்டாம்
நாலாயிரம் போதும்
மாலாயிரம் நாமம் தரும்
நாலாயிரம் போதும்
– நாலாயிரம் நம் சொத்து

சரணம்
அன்புடன் இராமானுஜர் நமக்கு தந்த சொத்து
ஆர்வமுடன் சேவித்தால் நமக்கு இல்லை பத்து
இகபர சுகத்திற்கெல்லாம் பிரபந்தம் ஒன்றே வித்து
ஈசனவன் பாடும் நாலாயிரம் நாம் அணிகின்ற முத்து

—-பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

இசை ஆரம்

அன்றும் இன்றும் என்றுமுள்ளது இசை
ஆரவாரமில்லாமல் அமைதியாய் ஒரு மின்னிதழ்
இசை ஆரம் என்ற பெயர் கொண்ட இம் மின்னிதழ்
ஈசன் அருளாலும் ஆன்றோர் ஆசியாலும்
உலகெலாம் சென்று இசை ஆய்வு செய்வோரை
ஊக்குவித்து புதிய புதிய ஆராய்ச்சிகள் மலரவும்
எண்ணத்திலும் எழுத்திலும் இசை நடன சார் எழுச்சியும் எழ
ஏற்றமான பங்களிப்பு அளித்திடும் இசை ஆரம் என்பதில்
ஐயமில்லை ஐயமில்லை ஐயமேயில்லை
ஒருமருந்தாம் இவ்வுள்ளத்திற்கும் உணர்விக்குமானது இசை
ஓங்கார பரமன் வடிவான இசையை பயில்வோம்
ஔவைத்தமிழின் இசையை இசை ஆரத்தில் வாசித்து பயன் பெறுவோம்.

பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்