அபிராமி அருள் 4

அபிராமி
உதயமானாள் அபிராமி உதயமானாள்
மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி நின்றாள்
நாயகி நான்முகி நாராயணி
கை நளின பஞ்ச நாயகி
சாம்பவி, சங்கரி, சாமளை
சாதி நச்சு வாய் அகி மாலினி
வாராகி சூலினி மாதங்கி

உதயமானாள் அபிராமி உதயமானள்
உத்தமனின் ஆபரணம் மூலமாக
உருமாறினார் லிங்க உருவானவர்
உருண்டை குடமாக உருமாறினார்
இளமைதரும் அமிர்தம் மீண்டும் வந்தது
ஈசன் செயலில் இதுவும் நல்லது

அன்புடை உமையாம் அபிராமியை
ஆண்டவன் ஆட்கொண்டார் தன் உருபெற்று
அம்மையும் அப்பனும் இணைந்து ஆடினார்
ஆனந்த திருநடம் அனைவரும் மகிழவே

PROF. DR. V.V. MEENAKSHI JAYAKUMAR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *