திருச்சதகம்

திருச்சதகம்

நாடகத்தால் உன் அடியார் போல்  நடித்து நான் நடுவே

வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்

ஆடகம் சீர் மணிக்குன்றே இடைஅறா அன்பு உனக்கென்

ஊடு அகத்தே நின்று உருகத் தந்தருள் எம் உடையானே

மாணிக்கவாசகர்

 

 

வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி

ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையுமாய் இன்மையும் ஆய்

கோன் ஆகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு

வான் ஆகி நின்றாயை என்  சொல்லி வாழ்த்துவனே

மாணிக்கவாசகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *