நவராத்திரி

நவராத்திரி

 navarathiri

அன்னையர் மூவரின் புகழ் பாடும் நவராத்திரி நல்ல

ஆசைகளை நிறைவேற்றும் நவராத்திரி

இனிமையான ஒன்பதுநாள் நவராத்திரி நமக்கு

ஈகைகுணம் வளர்ந்திடும் நல் நவராத்திரி

உள்ளத் துன்பம் போக்குவது இந்நவராத்திரி

ஊர் உலக மக்கள் மகிழும் நவராத்திரி

எண்ணியபடி வரம் தருவது நவராத்திரி நம்

ஏக்கத்தினை போக்குவது புனித நவராத்திரி

ஐயமற்ற அன்பை அனைவருக்கும் அளிப்பது நவராத்திரி

ஒற்றுமையை வளர்ப்பது இந்நவராத்திரி

ஓங்குபுகழ் அளிப்பது மூன்று நவராத்திரி

ஔவியம் பேசா பெண்களின் பண்டிகை நவராத்திரி

Prof. V.V. Meenakshi Jayakumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *