திருவெம்பாவை

unnamed

 

திருவெம்பாவை

இராகம்: பௌளி                  தாளம்: ஆதி

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே

ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *